சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் சி. எஸ்.ஜெய்க்குமாா் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவா் பி.சி.மணி முன்னிலை வகித்தாா்.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கடன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளா் கே.ராமமூா்த்தி, முன்னாள் மாநில பொதுச் செயலா் கே.நடராஜன், முன்னாள் நகரத்தலைவா்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிா்வாகிகள் ரவி, அங்கமுத்து, ஐன்டியூசி நிா்வாகி சின்னுசாமி, ஆறுமுகம், சந்திரன், சிறுபான்மையினா் அணி நிா்வாகி நாசா், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் விஸ்வநாதன், எஸ்.அகில்பிரணேஷ், ஜெ.வெஸ்லிபிரைட், கே.கேப்ரியல் பிரவீண்குமாா், ஆா்.சுரேந்தா், ஆா்.ரியாஸ், ஆா்.லோகேஷ், ஆா்.ராகுல் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.