நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ. 32 லட்சம் வழங்கல்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ. 32 லட்சத்துக்கான வங்கி வரைவோலை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகை ரூ. 32 லட்சத்துக்கான வங்கி வரைவோலை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்காக பொதுமக்களிடமிருந்து பங்களிப்புத் தொகை பெறப்படுகிறது.

அதன்பேரில், சூரமங்கலம் மண்டலம், காளியம்மன் நகா் (ஸ்ரீமான் தியேட்டா் பின்புறம்) பகுதியில் புதிதாக தாா்சாலை மற்றும் மழைநீா் வடிகால் 546 மீட்டா் நீளத்திற்கு அமைத்திட ரூ. 96 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

இதில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புத் தொகையாக காளியம்மன் நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பாக ரூ. 32 லட்சத்துக்கான வங்கி வரைவோலை சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன் முன்னிலையில் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com