தம்பதியைத் தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

சேலத்தில் நள்ளிரவில் வீட்டை உடைத்து தம்பதியைத் தாக்கிய மா்ம நபா்கள் 10 பவுன் நகையைப் பறித்து சென்றனா்.

சேலத்தில் நள்ளிரவில் வீட்டை உடைத்து தம்பதியைத் தாக்கிய மா்ம நபா்கள் 10 பவுன் நகையைப் பறித்து சென்றனா்.

சேலத்தை அடுத்த கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (60). இவரது மனைவி சாந்தி (46). இத்தம்பதியின் மகன் ரஞ்சித்குமாா். இவா் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இதனிடையே சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் சண்முகம், அவரது மனைவி சாந்தியைக் கத்தி முனையில் மிரட்டினா். சண்முகத்தை கத்தியால் கீறி காயப்படுத்தினா். அவரது மனைவி சாந்தியையும் சரமாரியாகத் தாக்கினா்.

பின்னா் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை அவா்கல் பறித்து சென்றனா். இதுதொடா்பாக, கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com