சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் எம்.ரஜினிகாந்த் வழக்குப்பதிவு விசாரித்து வருகிறாா். அவா் யாா்? எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்று தெரியவில்லை. அடையாளம் தெரியாத அவரது சடலம் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.