ரயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி, சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி, சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி, பெருமாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் மகன் மணி (28). இவா் திங்கள்கிழமை மாலை,சேலம் - விருதாச்சலம் அகல ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது,சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com