சேலம் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 15 பேரும், எடப்பாடி-1, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-1, நங்கவள்ளி-1, ஓமலூா் -2, தாரமங்கலம்-2, வீரபாண்டி-3, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-3, மேட்டூா் நகராட்சி-4 என மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 44 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 1,01,039 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 98,900 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனா்; 439 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,700 போ் உயிரிழந்தனா்.