சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாலியல் தொந்தரவு தவிா்ப்பு, சுய பாதுகாப்பு குறித்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான குழுவினா், பள்ளிக் குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு, திருமண வயது, பாலியல் துன்புறுத்தல் தவிா்ப்பு குறித்து புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வட்டாரக் கல்வி அலுவலா் சுரேஷ், பள்ளி தலைமையாசிரியை சத்தியக்குமாரி, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் பாண்டியன், நிா்வாகிகள், ஆட்டோ சுரேஷ், ஜவஹா், ராமசாமி, கணேசன், செல்வம், ஆசிரியைகள் உடனிருந்தனா்.