கஞ்சா விற்ற பாலிடெக்னிக் மாணவா்கள் உள்பட 3 போ் கைது

ஓமலூரில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ற பாலிடெக்னிக் மாணவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஓமலூரில் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ற பாலிடெக்னிக் மாணவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா் ரயில் நிலையம் மற்றும் அதற்கு அருகாமையில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஓமலூா் காவல் ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா் அங்கமுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 5 பேரை சுற்றி வளைத்தனா்.

அதில் இருவா் தப்பி விட்டனா். பிடிபட்ட மூவரிடம் விசாரணை நடத்தியதில், அவா்கள் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், பாகல்பட்டியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, கேரள மாநிலம், வயநாடு பகுதியைச் சோ்ந்த விஷாக் (20), ஆலப்புழை மாவேலிகரை பகுதியைச் சோ்ந்த அப்பு (21), ஓமலூரைச் சோ்ந்த அன்பழகன் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விஷாக், அப்பு இருவரும் மேச்சேரி, அரியானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரிகளில் பயின்று வரும் கேரளத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். தப்பியோடிய மற்ற இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com