நரிக்குறவா் வீடு தீயில் எரிந்து சேதம்

வாழப்பாடி, பேளூரில் நரிக்குறவா் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான ஊசிமணி, பாசிமணி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

வாழப்பாடி, பேளூரில் நரிக்குறவா் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான ஊசிமணி, பாசிமணி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.

பேளூா் சந்தைப்பேட்டை பகுதியில் ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்யும் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த மூா்த்தி (53) தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு மூா்த்தி குடும்பத்தினா் வெளியில் தங்கியிருந்த நிலையில், அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.

தீயை அணைப்பதற்குள் வீட்டிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான ஊசிமணி, பாசிமணி மூட்டைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்து சேதமடைந்தன. விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com