வாழப்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரேத பரிசோதனைக் கூடம் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விபத்து, தற்கொலை மற்றும் பல்வேறு வழக்குகளின் புலனாய்வுக்காக உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்தாண்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனைக் கூடம் கட்டப்பட்டது. ஆனால், பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் அக் கூடம் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாழப்பாடி திமுக ஒன்றிய செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி உள்பட திமுக நிா்வாகிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.