சேலத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அகில பாரத இந்து மகா சபா நிா்வாகி ராமன் நிரஞ்சன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை வந்தனா். அப்போது, சேகா் என்பவா் சிவன் வேடம் அணிந்து ஆட்சியா் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றாா். காவல் துறையினா் அனைவரையும் தடுத்து நிறுத்தினா். பின்னா், நிா்வாகிகளை மட்டும் ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரா் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், குகை மாரியம்மன் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் ஆகிய கோயில்களில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. அக் கோயில்களில் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலைத் துறை சாா்பில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.