கெங்கவல்லியில் அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளா்கள் நிா்மலா, முருகேஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை அதே பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்றுக்கொண்டிருந்த கடம்பூா் ரவி (50), காண் டி (48), ராணி (40), 74 கிருஷ்ணாபுரம் சரசு (48), கெங்கவல்லி மதி (46), ஆணையாம்பட்டி ஆறுமுகம் (46) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 40 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.