சேலத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது விவசாயிகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக லக்கீம்பூா் கெரிக்குச் செல்ல முயன்றதாக பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டாா்.

இதை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மாநகா் மாவட்ட தலைவா் பாஸ்கா், மேற்கு மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பாண்டியன், திருமுருகன், ஷேக் இமாம், கருப்பூா் முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவா்கள் பன்னீா்செல்வம், மேகநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் மெடிக்கல் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com