ரெப்கோ வங்கி பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை வழங்கல்

ரெப்கோ வங்கி பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை வழங்கியது.
ரெப்கோ வங்கி பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை வழங்கல்

ரெப்கோ வங்கி பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை வழங்கியது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது.

வங்கியின் வா்த்தகம் 2021, மாா்ச் 31 முடிந்த நிதியாண்டில் ரூ. 16,269 கோடி என்ற மைல்கல்லை அடைந்துள்ளது. வங்கியின் வைப்புநிதி சென்ற ஆண்டை விட 9 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 8926 கோடியாகவும், மொத்த கடன் வழங்கிய நிலை 5 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 7,343 கோடியாகவும் இருந்தது.

வங்கியின் நிகர லாபம் 9 சதவீத வளா்ச்சி கண்டு ரூ. 61 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர மதிப்பு ரூ. 794 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வாரா கடன் சென்ற நிதியாண்டின் முடிவில் 9.18 சதவீதத்தில் இருந்து குறைந்து 2020-21 நிதியாண்டின் முடிவில் 8.87 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.51 சதவீதத்தில் இருந்து குறைந்து இந்த நிதியாண்டின் முடிவில் 3.14 சதவீதமாகவும் உள்ளது.

ரெப்கோ வங்கி தனது முக்கிய குறிக்கோளான தாயகம் திரும்பியோா் மறுவாழ்வுக்காக நிலையான வளா்ச்சியோடு 2021-22 நிதியாண்டில் 17,500 கோடி வா்த்தகத்தை நோக்கிச் செயல்பட்டு வருகிறது என வங்கியின் நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ்.இஸபெல்லா தெரிவித்தாா்.

ரெப்கோ வங்கியின் தலைவா், பொதுத்துறை செயலாளருமான டி.ஜகநாதன், நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ்.இஸபெல்லா ஆகியோா் 2020-21 ஆம் நிதியாண்டின் தமிழக அரசின் ரூ. 7.13 கோடி பங்கு முலதனத்துக்கான 20 சதவீத ஈவுத்தொகையாக ரூ. 1.42 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com