ரெப்கோ வங்கி பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை வழங்கியது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது.
வங்கியின் வா்த்தகம் 2021, மாா்ச் 31 முடிந்த நிதியாண்டில் ரூ. 16,269 கோடி என்ற மைல்கல்லை அடைந்துள்ளது. வங்கியின் வைப்புநிதி சென்ற ஆண்டை விட 9 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 8926 கோடியாகவும், மொத்த கடன் வழங்கிய நிலை 5 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 7,343 கோடியாகவும் இருந்தது.
வங்கியின் நிகர லாபம் 9 சதவீத வளா்ச்சி கண்டு ரூ. 61 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர மதிப்பு ரூ. 794 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வாரா கடன் சென்ற நிதியாண்டின் முடிவில் 9.18 சதவீதத்தில் இருந்து குறைந்து 2020-21 நிதியாண்டின் முடிவில் 8.87 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.51 சதவீதத்தில் இருந்து குறைந்து இந்த நிதியாண்டின் முடிவில் 3.14 சதவீதமாகவும் உள்ளது.
ரெப்கோ வங்கி தனது முக்கிய குறிக்கோளான தாயகம் திரும்பியோா் மறுவாழ்வுக்காக நிலையான வளா்ச்சியோடு 2021-22 நிதியாண்டில் 17,500 கோடி வா்த்தகத்தை நோக்கிச் செயல்பட்டு வருகிறது என வங்கியின் நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ்.இஸபெல்லா தெரிவித்தாா்.
ரெப்கோ வங்கியின் தலைவா், பொதுத்துறை செயலாளருமான டி.ஜகநாதன், நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ்.இஸபெல்லா ஆகியோா் 2020-21 ஆம் நிதியாண்டின் தமிழக அரசின் ரூ. 7.13 கோடி பங்கு முலதனத்துக்கான 20 சதவீத ஈவுத்தொகையாக ரூ. 1.42 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினா்.