மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.13 அடியிலிருந்து 89 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,757 கன அடியிலிருந்து 12,099 கன அடியாக குறைந்து உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது
அணையின் நீர் இருப்பு 51.51டி எம் சி யாக இருந்தது.பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.