ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் முட்டல் அருவியில் திங்கள்கிழமை பெருவெள்ளம் ஏற்பட்டது (படம்).
கடந்த சில நாள்களாக கல்வராயன் மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூா் குற்றாலம் என அனைவராலும் அழைக்கப்படும் முட்டல் ஆனைவாரி அருவியில் தீடீரென வெள்ளம் அதிகரித்தது. இதனால், அருவியில் நீராட பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்தது. இப்பெரு வெள்ளத்தால், முட்டல் ஏரி நிரம்பும் நிலை உள்ளது.