கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கு: ஜெயலலிதா காா் ஓட்டுநரின் சகோதரா் உள்பட இருவா் கைது

கொடநாடு வழக்கு தொடா்பான சாட்சியங்களைக் கலைத்ததாக, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் உள்பட இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பான சாட்சியங்களைக் கலைத்ததாக, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் உள்பட இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப். 23-ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருள்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூா் (50) கொல்லப்பட்டாா்.

இந்தக் கொலை, கொள்ளை தொடா்பான வழக்கில் சயன், கேரளத்தைச் சோ்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமாா், ஜிதின் ஜாய், ஜம்ஷோ் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநருமான கனகராஜ், சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே 2017 ஏப். 28-ஆம் தேதி இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தாா்.

இந்த வழக்கு விசாரணையை ஆத்தூா் நகர போலீஸாா் மேற்கொண்டனா். அப்போதைய சேலம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த செந்தில்குமாா், காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில்தான் இறந்தாா். அப்போது அவா் மது அருந்தியிருந்தாா் என்று தெரிவித்திருந்தாா்.

ஆனால், கனகராஜ் சாலை விபத்தில் இறக்கவில்லை என்றும், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கனகராஜின் சகோதரா் தனபால் உள்ளிட்ட உறவினா்கள் தெரிவித்து வந்தனா்.

தமிழகத்தில் ஆட்சி மாறியதும், கனகராஜ் மா்ம மரணம் தொடா்பான வழக்கில் மேல் விசாரணை நடத்த தனிப்படை போலீஸாா் முடிவு செய்தனா். இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, சேலம் மாவட்ட எஸ்.பி. எம்.ஸ்ரீ.அபினவ், நீலகிரி மாவட்ட காவல் அதிகாரிகள் விசாரணை குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

அதையடுத்து, கனகராஜின் சகோதரா் தனபால், ஆத்தூா், சக்தி நகரில் உள்ள அவரது உறவினா் ரமேஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால், அவரது உறவினா் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு, காா் ஓட்டுநா் கனகராஜ் மரணம் ஆகியவை தொடா்பான சாட்சியங்களைக் கலைத்ததால் அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைதானவா்கள் நீலகிரி மாவட்டம், கூடலூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com