மக்கள் குறை தீா்க்கும் முகாம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் பெறப்பட்ட 410 மனுக்களில் தகுதியானவை மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் பெறப்பட்ட 410 மனுக்களில் தகுதியானவை மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள், மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 410 மனுக்கள் வரப்பெற்றன.

இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், அந்தந்த துறை அலுவலா்களிடம் வழங்கி பொதுமக்களின் தகுதியான மனுக்களின் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் வழங்கிய 15 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு வழங்கினாா்.

குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வெ.ஆலின் சுனேஜா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சு.சத்தியபால கங்காதரன் உள்ளிட்ட தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com