சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் அக். 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சேலம் மாவட்ட அக்டோபா் மாத விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக். 29 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம்தள கூட்ட அறை எண் 215-இல் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற உள்ளது.
விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண் சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.