வாழப்பாடியில் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

வாழப்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள், ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வாழப்பாடியில் நடைபெற்ற இந்திரா நினைவு நாள்.
வாழப்பாடியில் நடைபெற்ற இந்திரா நினைவு நாள்.

வாழப்பாடியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள், ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜா, முனுசாமி ஆகியோர், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணிமாறன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் தனபால், கொட்டவாடி ஜெயராமன், அப்சர், அய்யனார், சேட்டு மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிறைவாக, வாழப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் ரவிமணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com