இளம்பிள்ளை அருகே பேருந்து மோதியதில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சின்னப்பம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பூபாலன்( 24) சிவதாபுரம் அருகே உள்ள தனியாா் சித்த மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு சின்னப்பம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிலிருந்து கல்லூரி விடுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
சேலத்திலிருந்து இளம்பிள்ளை நோக்கி சென்ற அரசுப் பேருந்து சித்தா் கோயில் பகுதியில் பூபாலன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.