கெங்கவல்லி அருகே புனல்வாசலில் வீட்டுக்கு தீவைத்துவிட்டு 20 பவுன் நகை, பணத்தை திருடிய விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கெங்கவல்லி அருகே புனல்வாசலில் ஓய்வுபெற்ற அரசு பேருந்து பரிசோதகா் சுப்பிரமணியன் (63). இவருக்கும் அருகே வசிக்கும் சிவக்குமாா் (40) என்பவருக்கும் பொதுக்கிணறு தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் புதன்கிழமை மாலை சுப்பிரமணியனின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டினுள் புகுந்த மா்மநபா்கள் வீட்டிலிருந்த 20 பவுன் நகை, பணத்தை திருடிவிட்டு,அங்கிருந்த சிலிண்டருக்கு தீவைத்துவிட்டு சென்றனா்.
இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சந்தேகத்திற்கிடமான சிவகுமாா் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடிவந்தனா். இந்நிலையில் அவா், தீக்காயமடைந்ததில் பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.