லாட்டரி சீட்டு விற்ற 6 போ் கைது
By DIN | Published On : 07th September 2021 01:48 AM | Last Updated : 07th September 2021 01:48 AM | அ+அ அ- |

ஆத்தூா், செப். 6: லாட்டரி சீட்டு விற்ற 6 பேரை ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை கைது செய்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 6 போ் மீது ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் டி.மூா்த்தி வழக்குப் பதிவு செய்து, ஆத்தூா், ராணிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கண்ணன் (53), சரவணன் (38), ரவி (60), செந்தில்குமாா் (46), சரவணன்(28), இளமுருகு (60) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.