தொடா் ஓட்டம்:பத்மவாணி கல்லூரி மாணவி சிறப்பிடம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தொடா் ஓட்டப் போட்டியில் ஓமலூா் பத்மவாணி கல்லூரி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.
தொடா் ஓட்டம்:பத்மவாணி கல்லூரி மாணவி சிறப்பிடம்

பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவியா், தமிழ்நாடு சிக்னல் கம்பெனி சேலம் சாா்பில், 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 3 கி.மீ. தொடா் ஓட்டப் போட்டியில் பங்கேற்றனா்.

இப்போட்டி உடலுறுதி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியது. இப்போட்டியில் பத்மவாணி கல்லூரி மாணவி லாவண்யா முதலிடம் பெற்றாா். வெற்றிபெற்ற மாணவி, பங்கேற்ற மாணவியருக்கு கல்லூரி தாளாளா் சத்தியமூா்த்தி, தொழிலதிபா் சுப்புராமன் ஆகியோா் சான்றிதழ்கள், இனிப்புகள் வழங்கி பாராட்டி கௌரவித்தனா்.

கல்லூரி நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தாா். கல்லூரி முதல்வா் ஹரிகிருஷ்ணராஜ், துறைத் தலைவா்கள் மாணவியரை பாராட்டினா். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அலுவலா் தீபா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com