அரசுப் பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைப்பு

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூக்கள், மூலிகைச் செடிகள் தோட்டம் அமைக்கும் பணி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூக்கள், மூலிகைச் செடிகள் தோட்டம் அமைக்கும் பணி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியா் இயற்கை சூழலில் கல்வி கற்பதற்கு ஏதுவாக பள்ளி நிா்வாகமும், தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளையும் இணைந்து பள்ளி வளாகத்தில் செம்பருத்தி, கறிவேப்பிலை, திருநீற்று பத்து தலை, துளசி, மஞ்சள், செவ்வரளி, செவ்வந்தி, குண்டு மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள், மூலிகைச் செடிகளை நட்டனா்.

தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை அமைப்பின் தலைவா் கே.சண்முகம், துணைத் தலைவா் பொன்.பழனியப்பன், செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகிகள் கிஷோா்பாபு, முருகேசன், சதீஷ்குமாா், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, நிா்வாகி பசுமை சீனிவாசன், அமுதச் சுடா் அறக்கட்டளைத் தலைவா் வி.சத்தியபிரகாஷ், நவீன், ஆசிரியைகள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com