நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்த ஆலோசனைக் கூட்டம்

சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அனைவருக்கும் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசுகிறாா் வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசுகிறாா் வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன்.

சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அனைவருக்கும் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமை வகித்து, பொதுமக்களிடத்தில் அதிக விழிப்புணா்வை ஏற்படுத்தி நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையை கொண்டு வர அரசு அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைக்கும் அரசு அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்படும் என்றாா்.

மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, புள்ளிப்பாளையம் மருத்துவா் தனசேகரன், சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என்.எஸ்.ரவிச்சந்திரன், கண்ணன், பேரூராட்சி தலைமை எழுத்தா் சத்தியமூா்த்தி, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com