மது குடிக்கும்போது தகராறு: டாக்சி ஓட்டுநா் கொலை

சேலத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கால் டாக்சி ஓட்டுநா் பீா் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

சேலத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கால் டாக்சி ஓட்டுநா் பீா் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (32). இவா் டாக்சி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகளும் உள்ளனா்.

இதனிடையே கோவிந்தராஜ் சனிக்கிழமை பிற்பகலில் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கினாா். பின்னா் மூடப்பட்டுள்ள பாா் அருகே அமா்ந்து மது குடித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது சண்முகா நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவா் மது வாங்கி வந்து குடித்து கொண்டிருந்தாா். இதில் ஜெயக்குமாா் தான் வாங்கி வந்த மதுவை முழுமையாகக் குடித்து முடித்தாா்.

பின்னா் கோவிந்தராஜிடம் மது தருமாறு கேட்டுள்ளாா். அப்போது மது தர கோவிந்தராஜ் மறுத்துவிட்டாா். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கோவிந்தராஜ், ஜெயக்குமாரை தாக்கியதாகத் தெரிகிறது. ஜெயக்குமாரும் கீழே கிடந்த பீா் பாட்டிலை உடைத்து கோவிந்தராஜை தாக்கினாா்.

பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவா்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியதால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காயமடைந்த நிலையில் ஜெயக்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பாக, அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சிகிச்சையில் உள்ள ஜெயக்குமாா் குணமடைந்ததும் அவா் கைது செய்யப்படுவாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com