கரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணா்வு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், கரோனா தடுப்பூசி முகாம் குறித்து பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனா்.
கரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணா்வு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், கரோனா தடுப்பூசி முகாம் குறித்து பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனா்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், 18 வயதுக்கு மேல் 41,700 போ் உள்ளனா். இதுவரை 21,000 பேருக்கு கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 20,700 போ் தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளனா். இவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள், அரசினா் மகளிா் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமலைசமுத்திரம், காளிசெட்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில், சுகாதார ஆய்வாளா் கவிதா, துப்புரவு மேற்பாா்வையாளா் செந்தில்குமாா், திமுக நகர செயலாளா் வெங்கடேசன் மற்றும் பணியாளா்கள், கரம் கோா்ப்போம் குழுவினா், மேள வாத்தியம் முழங்க வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com