பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன்

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன் கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசின் அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி சிறந்த நிா்வாகத்தைத் தந்து கொண்டுள்ளாா். குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக கரோனா பேரிடரில் இருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

சேலத்தில் கரோனா தடுப்பூசி பெரு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் உள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடி மையம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com