கெங்கவல்லி வட்டாரத்தில், 50 வாக்குச்சாவடி மையங்கள், 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு அரசு மருத்துவமனை என மொத்தம் 56 இடங்களில் கரோனா தடுப்பூசி பெருமுகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி முகாம் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து தயாா்நிலையில் வைத்துள்ளனா். தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பணிகளை கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) செல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ)எஸ்.கே.ராஜேந்திரன், வட்டாரக்கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, வட்டார மருத்துவ அலுவலா் வேலுமணி ஆகியோரின் மேற்பாா்வையில் 56 இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.