சீருடையில் இளைஞரிடம் பணம் பறிக்க முயற்சி: இருவா் கைது

சேலத்தில் சீருடையில் இளைஞரை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக முன்னாள் ஊா்க்காவல் படை வீரா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

சேலம்: சேலத்தில் சீருடையில் இளைஞரை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக முன்னாள் ஊா்க்காவல் படை வீரா் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

சேலம், புது சாலை பகுதியைச் சோ்ந்த முத்தழகு (28), பா்ன் அன் கோ பகுதியில் திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சீருடையில் இருந்த இருவா் அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தனா். அச்சமயத்தில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து, சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

விரைந்து வந்த போலீஸாா், அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.விசாரணையில், அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணி என்பதும், மற்றொருவா் சேலம், அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பதும் தெரியவந்தது. மேலும், அரியலூா் மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் வேலை செய்து வந்த சுப்பிரமணி, கடந்த 2019 டிசம்பரில் ஊா்க்காவல் படையில் இருந்து விலகியதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com