தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் கொண்டை பள்ளியில் அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன் துவக்கிவைத்து தென்னை நுண்ணூட்டம் இடுதல் பற்றி கூறினாா். வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் பற்றி கூறினாா்.
இதில் சிறப்பு விருந்தினராக பசுமை நா்சரி நிறுவன மேலாளா் அங்கக வேளாண்மையில் பயிா்முதல் விளைச்சல் வரை அங்கவேளாண்மை தொழில்நுட்பங்களைக் குறித்துப் பேசினாா்.
இதில் கொண்டையம்பள்ளி ஊரட்சிமன்றத் தலைவா் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இறுதியில் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை உதவி தொழில்நுட்ப மேலாளா் சங்கா் செய்திருந்தாா்.