சேலத்தில் 62 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 16 பேரும், எடப்பாடி-4, காடையாம்பட்டி-1, மேச்சேரி-1, ஓமலூா்-5, சேலம் வட்டம்-2, சங்ககிரி-3, தாரமங்கலம்-1, வீரபாண்டி-11, ஆத்தூா் -1, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-2, தலைவாசல்-4, ஆத்தூா் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 62 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 64 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 97,012 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 94,767 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 596 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,649 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com