ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
இதுகுறித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப் பிரிவில் முதலாமாண்டு சோ்க்கை பெற்று பயிலும் மாணவா்களுக்கான 2-ஆம் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் இணையவழியில் நடைபெற்றது.
இத் தோ்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாகவும், இணைவு பெற்ற கல்லூரிகள் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். மாணவா்களின் செல்லிடப்பேசிக்கு தோ்வு முடிவுகள் குறுந்தகவலாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளாா்.