மேட்டூா்: டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு அதிகரிப்பால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.
புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 74.69 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9,483 கன அடியிலிருந்து 9,750 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 16,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 750 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 36.86 டி.எம்.சி. யாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.