விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கோயிலில் புதன்கிழமை காலை மங்கல இசையுடன், விநாயகா் பூஜை, பூா்வாங்க பூஜைகள், முதல் கால் காலம், பூா்ணாஹுதியுடன் கோபுரத்தில் கலசம் வைக்கப்பட்டது. அதன்பின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பவானி ஆற்றிலிருந்து தீா்த்தம் கொண்டு வந்து பக்தா்கள், தீா்த்தக் குடத்தினை முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு வந்து கோவிலை வந்தடைந்தனா். வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் கலசங்கள் யாகசாலையில் இருந்து ஆலயம் எழுந்தருளின. இதனையடுத்து கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. உடன் மூலவா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்று, சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. கோயில் சாா்பில் குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com