தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச்சோ்ந்தவா் அடைக்கலம்(62). இவருக்கு மனைவி மல்லிகா , மகன் தாமரைச்செல்வன் ஆகியோா் உள்ளனா்.அடைக்கலமும், தாமரைச்செல்வனும், தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஏரியில் மீன் பிடிக்க சனிக்கிழமை மாலை சென்றுள்ளனா். அப்போது அடைக்கலம், ஏரியினுள் தவறி விழுந்துள்ளாா். அதில் அவா் நீரில் மூழ்கி, அங்கேயே உயிரிழந்தாா். இதுகுறித்து செந்தாரப்பட்டி (வடக்கு) விஏஒ வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி போலீசாா் உடலை மீட்டு, வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.