தீவிபத்து ஏற்பட்ட கடை.
தீவிபத்து ஏற்பட்ட கடை.

ஆத்தூரில் தையல் கடையில் தீ விபத்து

ஆத்தூரில் தையல் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.  

ஆத்தூரில் தையல் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 
சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம் ஆத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணிப்பேட்டையில் ஆத்தூர் உப்பு ஒடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (48)(செட்டியார்) த/பெகிருஷ்ணன் என்பவர் தையல் கடையும் அதன் உள்ளே சுஜாதா (43)(நாயுடு) க/பெ மனோகரன் என்பவர் பத்திரம் டைப் செய்யும் கடையும் வைத்து தொழில் செய்து வந்தனர். 
இந்நிலையில் இன்று 20.09.2021 ஆம் தேதி விடியற்காலை சுமார் 05.30 மணி அளவில் மேற்படி கடையில் மின்சார கசிவு காரணமாக தீப் பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காலை 07.00 மணியளவில் தீயை அனைத்து விட்டனர். 
மேற்படி தீ விபத்தினால் கடையில் வைக்கப்பட்டிருந்த 4 தையல் இயந்திரங்கள், ஒரு கம்ப்யூட்டர் பிரிண்டர் யுபிஎஸ் மற்றும் 55 ஆயிரம் மதிப்புள்ள பத்திரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com