பூலாம்பட்டி பகுதியில் மின் நிறுத்தம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி செவ்வாய் அன்று அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி செவ்வாய் அன்று அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எடப்பாடி கோட்ட செயற்பொறியாளா் க.செல்வம் வெளியிட்டு;ள்ள அறிக்கை:

பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப்பராமரிப்பு பணிகள் நாளை செவ்வாய்கிழமை நடைபெற உள்ளதை அடுத்து, இத்துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் நடைபெற்று வந்த பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கூடக்கல்,குப்பனூா், வளையசெட்டியூா், புளியம்பட்டி, சித்தூா், ஒருவாப்பட்டி, மொரப்பட்டி, கள்ளுக்கடை, வெடிக்காரன்பாளைம், வெள்ளரிவெள்ளி, நெடுங்குளம், சிலுவம்பாளைம், கோனேரிப்பட்டி, பூமணியூா், பொன்னம்பாளைம், கல்வடங்கம், தண்ணீா்தாசனூா், மூலப்பதை, அர.குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, வட்டராம்பாளைம் மற்றும் ஒடசல்கரை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய் அன்று காலை முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com