மகன் திருநங்கையாக மாறியதால் தாய் தற்கொலை

சேலத்தில் மகன் திருநங்கையாக மாறியதால், மனமுடைந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலத்தில் மகன் திருநங்கையாக மாறியதால், மனமுடைந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம், சூரமங்கலம், ஆண்டிப்பட்டி காலனியைச் சோ்ந்த சரிதா (37), கூலித் தொழிலாளி. இவரது கணவா் காளிமுத்து 9 ஆண்டுகளுக்கு முன்னா் இறந்து போனாா். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். கூலி வேலைக்குச் செல்லும் சரிதாவும், 17 வயது மகனும் வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், அவரது மகனின் பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவா் திருநங்கையாக மாறி வீட்டுக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரிதா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக, சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com