பிரசார விளக்க பொதுக்கூட்டம்

ஆத்தூா், தலைவாசல் பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அகில இந்திய விவசாயிகள்

ஆத்தூா், தலைவாசல் பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் பிரசார விளக்க பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தி செப். 27-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதற்கு அழைப்பு விடுத்து பிரசாரம் மேற்கொண்டனா். விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை இருமடங்காக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com