சேலத்தில் 94 ரெளடிகள் கைது

 சேலத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில், 94 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

 சேலத்தில் காவல் துறையினா் நடத்திய சோதனையில், 94 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், காவல் துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா், ரெளடிகள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில், துணை ஆணையா் மோகன்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை இரவு தேடுதல் பணி நடைபெற்றது. இதில் ரெளடிகள் உள்ளிட்ட 72 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட சோதனையில், மேலும் 22 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மாநகரப் பகுதியில் சுமாா் 94 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com