கொங்கணாபுரத்தில்ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 2,100 மூட்டை பருத்திகள் ரூ. 45 லட்சத்துக்கு விற்பனையானது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 2,100 மூட்டை பருத்திகள் ரூ. 45 லட்சத்துக்கு விற்பனையானது.

வாரந்தோறும் சனிக்கிழமை இம்மையத்தில் பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருள்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், சேலம், நாமக்கல் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.

சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த 2,100 பருத்தி மூட்டைகள் 500 லாட்டுகளாகப் பிரித்து, கூட்டுறவு அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மொத்தக் கொள்முதல் செய்தனா். இதில் பி.டி. ரக பருத்தியானது ஒரு குவிண்டால் ரூ. 7,250 முதல் ரூ. 8,100 வரை விற்பனையானது. இந்த பொது ஏலத்தில் மொத்தம் ரூ. 45 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com