பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சாா்பில், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளையின் தலைவா் பி.ஆண்டிமுத்து தலைமையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிா்வாகிகள் மனு அளித்தனா் (படம்).
இதில், செயலா் எஸ்.வேலுசாமி, வட்டப் பொருளாளா் எம்.சேகா், துணைத் தலைவா் பி.சண்முகம், பொருளாளா் எஸ்.தீனதயாளன், துணைச் செயலா் எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.