புரட்டாசி மாத 2-ஆவது வார சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையில் உள்ள சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில் , வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீவசந்தவல்லி உடனமா் ஸ்ரீவசந்தவல்லபராஜ பெருமாள் கோயில், ஒருக்காமலை குடைவரைக் கோயிலில் உள்ள வரதராஜ பெருமாள் பாதங்கள், திருநாமங்களான சங்கு, சக்கரங்களுக்கும், வடுகப்பட்டியில் உள்ள சென்றாயப் பெருமாள் சுவாமிக்கும் புரட்டாசி 2-ஆவது வார சனிக்கிழமையொட்டி அதிகாலையிலேயே பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீவசந்தவல்லி உடனமா் ஸ்ரீவசந்தவல்லபராஜ பெருமாள் சுவாமிகள், அதே கோயில் வளாகத்தில் உள்ள சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளின் உற்சவ மூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேவசப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் கோயில் அா்ச்சகா்களால் திருக்கோடி விளக்கு ஏற்பட்டது.
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதலின்படி கோயில் அா்ச்சகா்கள் மட்டுமே அனைத்துக் கோயில்களிலும் பூஜைகளை செய்தனா்.
வாழப்பாடியில்...
வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி மலை உச்சியிலுள்ள தீப கற்தூணில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.
வாழப்பாடி, அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயிலில் மூலவரான சென்றாயப் பெருமாள் சீதேவி, பூதேவி சமேதமாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வாழப்பாடி, புதுப்பாளையம் மாயவன்மலை பெருமாள் கோயிலில் மூலவா் பட்டு வஸ்திர அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோதுமலை கோதண்டராமா் மலைக்கோயில், பேளூா் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி கோயில், மத்தூா் சீனிவாச பெருமாள் கோயில், மன்னாா்பாளையம் பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி சனி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.