சேலத்தில் 1.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,10,317 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,10,317 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே செப். 12 இல் நடைபெற்ற முதல்கட்ட பெரு முகாமில் 1.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல செப். 19 இல் நடைபெற்ற இரண்டாம் கட்ட முகாமில் 82,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 1,392 மையங்களில் சுமாா் 1,11,020 தடுப்பூசிகள் செலுத்தப்பட இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் அதிகாலையிலேயே மையங்களுக்குச் சென்று வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனா். அதேபோல சேலம் மாநகராட்சி பகுதியில் 200 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 1,392 மையங்களில் 1,10,317 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com