பட்டா பெயா் மாற்றம் செய்ய லஞ்சம்:கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் கைது

சேலம் அருகே பட்டா பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் அருகே பட்டா பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம், பெத்தாம்பட்டி அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா், பெத்தாம்பட்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தாா். விண்ணப்பத்தைப் பரிசீலித்த பெத்தாம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி, உதவியாளா் உதயகுமாா் ஆகியோா் ரூ. 3,500 லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டனா்.

இதையடுத்து செல்வகுமாா், சேலம் ஊழல் தடுப்புத் துறை போலீஸில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி, அவரது உதவியாளா் உதயகுமாா் ஆகியோரை லஞ்சம் பெறும் போது கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com