எடப்பாடி நகராட்சிப் பகுதியில் பேருந்து நிலையம், பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில், உணவகங்கள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், துணிக்கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன.