தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இடங்களைத் தவிா்த்து கிராம சபைக் கூட்டம்

மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இடங்களைத் தவிா்த்து, மற்ற கிராம ஊராட்சிகளில் அக். 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இடங்களைத் தவிா்த்து, மற்ற கிராம ஊராட்சிகளில் அக். 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில், கரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் அரசு விதித்துள்ள தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடந்திட வேண்டும். கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமத்தின் வளா்ச்சியை உறுதிசெய்திடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியப் பணிகள், அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், தடுப்பூசி செலுத்துதல், ஆரோக்கியம், சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளைக் கண்டறிதல், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் நீா்மேலாண்மை, மழை நீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு பிரசார நடவடிக்கைகளை ஒவ்வொரு குக்கிராம அளவிலும் துண்டுப் பிரசுரங்கள், சுவா் விளம்பரங்கள், ஊா்வலங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்தல் வேண்டும்.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்தத் தடை செய்தல், திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல், கழிப்பறையைக் கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோா் விவரப் பட்டியல் தெரிவித்தல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்திட வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளா்ச்சித் திட்டம் குறித்து விவாதம் செய்தல், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2021-22, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளா்ச்சி திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குதல், அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com