ஆத்தூர்: அதிமுக தலைமை வலியுறுத்தியதின் அடிப்படையில் ஆத்தூரில் நீர்-மோர் பந்தலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.ஜெயசங்கரன், அ.நல்லதம்பி, நகர செயலாளர் அ.மோகன், ஒன்றிய செயலாளர்கள் வி.பி.சேகர், கே.பி.முருகேசன், க.ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.